மயிலாடுதுறை, ஜூலை 12-
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.3 கோடிக்கு பருத்தி கொள்முதல் நடைபெற்றது.
செம்பனார்கோயிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளின் விளைபொருட்கள் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின்படி இ-நாம் மூலம் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திங்களன்று தேசிய வேளாண் மின்னணு சந்தை மூலம் கண்காணிப்பாளர் சங்கர்ராஜா தலைமை யில் இணைச் செயலாளர் சிலம்பரசன் மேற்பார்வையில் ஏலம் நடைபெற்றது. இந்த பருத்தி ஏலத்தில் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.6,679-க்கும், குறைந்த பட்ச விலையாக ரூ.5,845-க்கும் சராசரி விலையாக ரூ. 6,245-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.
மொத்தமாக சுமார் 4,100 குவிண்டால் பருத்தி ரூ.3 கோடிக்கு கொள்முதல் பரிவர்த்தனை நடைபெற்றது. இந்த ஏலத்தில் 896 விவசாயிகள் கொண்டு வந்த பருத்தி யை, தேனி, கோவை, கொங்கணாபுரம், பெரம்பலூர், விழுப்புரம், திருப்பூர், கும்பகோணம் மற்றும் ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 19 வியாபாரி கள் மற்றும் மில் அதிபர்கள் கொள்முதல் செய்தனர்.