பொன்னமராவதி, ஜூன் 27-
பொன்னமராவதி பொன்புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்ட அள விலான வளரிளம் பருவத்தினர் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
மருத்துவ அலுவலர் சிவகலை தலைமை வகித்தார். மருத்துவர்கள் சுகன்யா, பல் மருத்துவர் லட்சுமி பிரியா மற்றும் கண் மருத்துவ உதவியாளர் ராஜேந்திரன், மருத்து வமல்லா மேற்பார்வையாளர் மோசஸ், மருந்தாளுநர் அசோகன் மற்றும் பகுதி சுகாதார செவிலியர் ராஜேஸ்வரி மற்றும் செவிலியர்கள், ஆய்வக நுட்பணர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பொது மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், தோல் மருத்துவம் தொடர் பான பிரச்சனைக்கு ஆலோசனைகளை வழங்கினர். முகா மிற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் பா.தியாக ராஜன் செய்திருந்தார்.