districts

பட்டுக்கோட்டை ரயில் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க முடிவு

தஞ்சாவூர், ஆக.7-  

    பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் மரக்  கன்றுகள் நட்டு பராமரிக்க முடிவு செய்யப்பட்  டுள்ளது.

   தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தின்  பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத் திற்கு சங்கத் தலைவர் நா.ஜெயராமன் தலைமை வகித்தார். செயலாளர் வ.விவே கானந்தம் வரவேற்றார்.

    காரைக்குடியில் இருந்து பட்டுக் கோட்டை வழியாக சென்னை எழும்பூருக்கு  தினசரி இரவு நேர விரைவு ரயிலை இயக்க  வேண்டும். மயிலாடுதுறையில், திருச்சி -  சென்னை சோழன் பகல் நேர அதிவிரைவு ரயிலுக்கு இணைப்பு ரயிலாக, காரைக்குடி யில் இருந்து மயிலாடுதுறைக்கு ரயில் இயக்க வேண்டும்.

    எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணா குளம் விரைவு ரயில், செகந்திராபாத் - இராம நாதபுரம் - செகந்திராபாத் விரைவு ரயில்களை  நிரந்தரமாக சாதாரண கட்டணத்தில் இயக்க வேண்டும். தாம்பரம் - செங்கோட்டை- தாம்ப ரம் அதிவிரைவு ரயில்கள் அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும். பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில், மீண்டும் ஞாயிற்றுக் கிழமைகளில் டிக்கெட் முன்பதிவு மையம் இயங்க வேண்டும்.

    பட்டுக்கோட்டை ரயில் நிலைய வளா கத்தை, பட்டுக்கோட்டை நகராட்சி நிர்வாகம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களின் உதவியுடன் தூய்மை செய்ய வேண்டும். ரயில் நிலைய வளா கத்தில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். பட்டுக்கோட்டையை சுற்றியுள்ள கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பள்ளிக்கூடங்களில், ரயில் விழிப்புணர்வு மற்றும் ரயில்வே வேலைவாய்ப்பு பற்றிய  கருத்தரங்குகளை நடத்துவது என்பன உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

   கூட்டத்தில், துணைச் செயலாளர் மு.கலி யபெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சங்கத்தின் பொருளா ளர் பி.சுந்தரராஜுலு நன்றி கூறினார்.