districts

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் மண் மாதிரி சேகரிப்பு பணி

தஞ்சாவூர், ஜூன் 21-

     தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டாரத்தில், 2023-24 ஆம்  நிதியாண்டிற்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 9 கிராமப் பஞ்சாயத்துகள் தேர்வு  செய்யப்பட்டுள்ளன.

    ஒரு கிராமத்திற்கு 100 மண் மாதிரிகள் வீதம் 9 கிராமங்களுக்கு 900 மண் மாதிரிகள் சேகரிக்க வேண்டியுள்ளது. கலைஞர் திட்ட கிராமமான  பண்ணவயல் ஊராட்சிக்குட்பட்ட கூத்தாடிவயல் வருவாய் கிரா மத்தில், செவ்வாய்க்கிழமை பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ச.மாலதி மண் மாதிரி சேகரிப்பு பணியை துவக்கி வைத்தார்.  

     பின்னர் அவர் பேசுகையில், “மண் மாதிரியானது நிலம் தரிசாக இருக்கும் காலத்தில் தான் எடுக்க வேண்டும். உரமிட்டவுடனும், பயிர்கள் உள்ள நிலத்திலும், மண் மாதிரிகள் எடுக்கக் கூடாது. சேக ரிக்கப்பட்ட மண் மாதிரி, ஆடுதுறை மண் பரிசோதனை நிலை யத்திற்கு அனுப்பப்பட்டு, மண்ணின் அமிலம், காரத் தன்மை, மண்ணில் உள்ள தழை, மணி மற்றும் சாம்பல் சத்துகள் அளவு கண்டறி யப்படுகிறது.  

    பின்பு மண் பரிசோதனை அட்டை, விவசாயிகளுக்கு வேளாண்மை  துறையின் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. மண் பரிசோதனை செய்வதன் மூலம் விவசாயிகள் உரச் செலவை குறைத்து அதிகமாக மக சூல் பெற்றிட முடியும். பயிர்களுக்கு தேவையான அளவை அறிந்து உரமிட முடியும். மண்ணின் தன்மைக்கேற்ப பயிரை தேர்ந்தெடுக்க முடியும்” என்றார்.