மயிலாடுதுறையில் “ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழர்களின் கனவுகளைத் தாங்கி” என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி திறந்து வைத்தார். மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் செ.இராமலிங்கம் , சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்வில் 428 பயனாளிகளுக்கு ரூ.3,18,61,996 மதிப்பிலான அரசு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.