நாகப்பட்டினம், ஆக.3 - நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட வேட்டைக்கார ணிருப்பு ஊராட்சி, சடையன்காடு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்ட பகுதி நேர நியாய விலை கடையை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வ ராஜ், மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கௌத மன், கீழையூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்வராணி ஞானசேகரன், வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.