திருச்சிராப்பள்ளி, ஆக.5 -
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், திருச்சி வீட்டு வசதிப் பிரிவு கோட்டத்திற்குட்பட்ட திட்டங்களில் செயல்படுத்தப் பட்ட திட்டங்கள் மூலம் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடி யிருப்புகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வரு கின்றன.
இதில் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரர்கள் ஒதுக்கீட்டிற்கு முழுத் தொகையினையும் செலுத்தியிருந்தால், அதற்குண்டான ஆவணங்களை சமர்ப்பித்து விற்பனைப் பத்திரம் பெற்றுக் கொள்ளும்படி, வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்கு நர் தெரிவித்துள்ளார்.
அதன்படி திருச்சி வீட்டு வசதிப் பிரிவு கோட்டத்திற்குட் பட்ட முழுத்தொகையினை செலுத்திய அனைத்து ஒதுக்கீடு தாரர்களும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து கிரையப் பத்திரம் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.