districts

அரசுப் பள்ளிகளில் ஆயிரம் அறிவியல் திருவிழா

அறந்தாங்கி, மே 13-

     புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள  பெருங்காடு, நற்பவளக்குடி மற்றும் பரவாக்கோட்டை அரசுப் பள்ளிகளில் ஆயிரம் அறிவியல் திருவிழா நடை பெற்றது‌.  

     அரசுப் பள்ளி மாணவர்களின் கணித மற்றும் அறிவி யல் திறனை மேம்படுத்தவும், செய்முறையுடன் பயிற்சி வழங்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு, இதற்கான பயிற்சிகளை வழங்கி வருகிறது. பெருங்காடு, நற்பவ ளக்குடி மற்றும் பரவாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நடைபெற்ற பயிற்சி முகாமில், வானவில் மன்ற கருத்தாளர் பெனா சிர் பானு தலைமை வகித்தார். வட்டார வளமைய அலுவ லர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் அறிவியல் சார்ந்த  பயிற்சி வகுப்புகளை நடத்தி, செய்முறைகளை செய்து  காட்டினர்.  அரசு பெண்கள் பள்ளியில்