districts

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

அரியலூர், ஆக.8-

    தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே யுள்ள அணைக்கரை, விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அன்பரசு(21). இவர் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து, உடையார்பாளையம் காவல் துறையினர், அன்பரசை கடந்த ஜூன் 28 அன்று போக்சோ சட்டத்தில் கைது செய்து ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைத் தனர்.

   இந்நிலையில், அன்பரசு ஏற்கனவே இதுபோன்ற பல  குற்றச்செயலில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. எனவே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில், அன்பரசை குண்டர்  சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா திங்கள்கிழமை உத்தரவிட்டார். இதை யடுத்து அன்பரசு திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.