districts

போக்குவரத்து நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்க அறிவுறுத்தல்

தஞ்சாவூர், ஜூலை 21-  

     தஞ்சாவூர் பொருளா தார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தஞ்சா வூர் மாவட்டம், பாபநாசம்  வழுத்தூரில் செயல்பட்டு வந்த மர்ஜிக் டிரான்ஸ் போர்ட் என்ற நிறுவனத்தின் மூலம், பல்வேறு முதலீட்டுத் திட்டங்களில் பணத்தை முத லீடு செய்தால் அதிக லாபம்  பெறலாம் என்று, பொதுமக்க ளிடம் முதலீடு பணத்தை பெற்று அவற்றை திருப்பித் தராமல் ஏமாற்றி விட்டதாக, தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசம் தாலுகா, சக்கராப் பள்ளி ஹவ்வா நகர் பர்ஹானா சப்ரீன் என்பவர் புகார் கொடுத்தார். இது  சம்பந்தமாக தஞ்சாவூர் பொருளாதார குற்றப்பிரி வில், வழக்குப் பதிவு செய்யப் பட்டு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.  

    மேற்படி மர்ஜிக் டிரான்ஸ் போர்ட் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த,  தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் பிற மாவட்டங் களைச் சேர்ந்தவர்கள் முத லீடு செய்திருந்தால் இது வரை புகார் அளிக்காத வர்கள், தாங்கள் முதலீடு செய்த ஆவணங்களுடன், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை, 57-பி,  ராஜப்பா நகர், முதல் தெரு வில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வா ளர் அலுவலகத்தில் உரிய  ஆவணங்களுடன் நேரில்  ஆஜராகி புகார் அளிக்க லாம்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.