districts

img

இலுப்பக்கோரை - தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் இடையே புதிய அரசுப் பேருந்து சேவை தொடக்கம்

பாபநாசம், மார்ச் 4 - பாபநாசம் ஒன்றியம் இலுப்பக்கோரை - தஞ்சாவூர்  பழைய பேருந்து நிலையம் இடையே புதிய அரசுப் பேருந்து தடம் எண் பி.26 தொடக்க நிகழ்ச்சி அய்யம் பேட்டையை அடுத்த இலுப்பக்கோரை கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாநில திட்டக் குழு துணைத் தலைவர் முனை வர் ஜெ.ஜெயரஞ்சன், மாநிலங்களவை உறுப்பினர் மு. சண்முகம், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பின ரும், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவருமான  பேரா. முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் பேருந்து  சேவையை கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.