districts

மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு

கும்பகோணம், ஏப்.18-

  கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் கிராமத்தில் மக்கள் நலக் குழு- அனைத்து அரசியல் கட்சிகள் இணைந்து அனைத்து மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது.  

  இதில் திருவடி குடில் சாமிகள், நாச்சியார்கோவில் ஜாமியா மஸ்ஜித் இமாம் முஹம்மது சலீம் ரியாஜ், ஞானசேகரன் சிவாச்சாரியார், சேது பட்டாச்சாரியார், கோபி பட்டாச்சாரியார், ஊராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், அனைத்துக் கட்சி தலைவர்கள், வர்த்தகர்கள்,  பாத்திர வியாபாரிகள், குத்து விளக்கு உற்பத்தியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், லயன்ஸ், ரோட்டரி சங்கத்தினர் பங்கேற்றனர். இந்தியா அமைதிப் பூங்காவாக சமூக நல்லிணக்கத்தோடு இருக்க  இது போன்ற நிகழ்வுகள் தொடர வேண்டுமென வலியுறுத்தினர்.

பாபநாசம்

  பாபநாசம் தாலுகா, இராஜகிரி ஹனபி பெரிய பள்ளி வாசலில் ஹபீபி நண்பர்கள் குழு சார்பில் ரமலானை முன்னிட்டு இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பெரிய பள்ளிவாசல் தலைவர் யூசுப் அலி வரவேற்றார். பெரிய பள்ளிவாசல் இமாம் முஹம்மது இஸ்மாயில் ரமலான் சிறப்பு பற்றி பேசினார்.