districts

img

ஜெயங்கொண்டத்தில் இரா.முத்தரசன் பிரச்சாரம்

அரியலூர், மார்ச் 30 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில், இந்தியா கூட்டணி சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி யில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் வேட்பாளர் தொல்.திரு மாவளவனை ஆதரித்து இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரிய லூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் கதிர்வள வன் வரவேற்றார். சிபிஐ மாவட்டச் செயலா ளர் ராமநாதன் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்  செயலாளர் இரா.முத்தரசன், ஜெயங்கொண் டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சங்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் இளங்கோவன் உட்பட  கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் சிபிஐ மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் சிறப்புரையாற்றினார். ஜெயங்கொண்டம் தொகுதி செயலாளர் இலக்கியதாசன் நன்றி கூறினார்.