districts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி கணவன்-மனைவி பலி

தஞ்சாவூர், மே 19-

   தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே சாலையோரத் தில் நடந்து சென்று கொண்டிருந்த கணவன், மனைவி மீது அடை யாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  

   தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, நாடியம்மன்கோவில் சாலை  காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்தவர் கோபால் (58), இவரது மனைவி  ஜெயலட்சுமி,(43). இருவரும் செருப்பு தைக்கும் தொழிலாளி, அவ்வப் போது கூலி வேலைக்கும் சென்று குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.

   இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை,  சேதுபாவாசத்திரத்தில் இருந்து கட்டுமாவடி நோக்கி செல்லும், கிழக்கு கடற்கரை சாலை யில், கழுமங்குடா சந்திப்பு பகுதியில் கோபால், ஜெயலட்சுமி இருவரும்  நடந்து சென்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு  நிற்காமல் சென்றது.

  இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரி ழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி, உடற்கூறாய்விற் காக போராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.