மதுரை, ஏப்.27-
மதுரை மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் கே. சிவப்பிரகாசம் (35) ,இவரது மனைவி பிரேமலதா (26).
சிவப்பிரகாசம் மாட்டுத்தா வணி காய்கறி மார்க்கெட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வாழை இலை வியாபாரம் செய்து வந்தார். இவர் தொழில் நிமித்தமாக மீனாம் பாள்புரம் சத்தியமூர்த்தி நகர் பகுதியில் தன்னுடைய வீட்டின் அருகில் வசிக்கும் இந்திரா, சாந்தி, தங்கம்மாள் ஆகிய மூன்று நபர்களி டம் ரூ. 3 லட்சம் வரை கந்து வட்டி மூலம் கடனாக பெற்றுள்ளார். இதில் இந்திரா என்பவரிடம் ஆறு மாதங்க ளுக்கு முன்பு ரூ 70 ஆயிரம் பெற்ற நிலையில் அதற்கு கடந்த ஆறு மாதங்களாக வட்டியாக மாதம் 24 ஆயிரம் கொடுத்து வந்துள் ளார். கடந்த ஒரு மாதமாக சிவபிரகாசம் வட்டி கொடுக்க முடியாத சூழ்நிலை யில் ஏப்ரல் 24ஆம் தேதி மாலை இந்திரா மற்றும் தங்கம்மாள் இருவ ரும் தனக்கு அசலும் வட்டியும் கொடுக்க வேண்டும் என்று தகாத முறையில் பேசியுள்ளார். இதில் மனமுடைந்த சிவப்பிரகாசம், பிரேம லதா ஆகிய இருவரும் 25ஆம் தேதி காலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். இந்தசம்பவம் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் செல்லூர் காவல் நிலையத்திற்கு புகார் தெரி வித்து அவர்கள் உடலை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புதன்கிழமையன்று உடற் கூராய்வு முடிந்து உறவினர்களிடம் சிவப்பிரகாசம் பிரேமலதா உடல் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து சிவப் பிரகாசின் சகோதரர் கே. பிரகாஷ் கூறுகையில், இது போன்ற சம்பவம் இனி யாருக்கும் நடக்கக் கூடாது. இறந்த எனது சகோதரர் சிவப்பிர காசிற்கு தர்ஷன் என்ற 5 வயது மகன் ,அபிநயா என்ற 3 வயது குழந்தையும் உள்ளது இன்றைக்கு இந்த இரண்டு குழந்தைகளும் கந்து வட்டிகொடுமையால் பெற் றோர்களை இழந்து வாடுகின்றது. வாங்கிய பணத்துக்கு மேல் வட்டி கட்டியுள்ளார் . மனிதாபிமானம் கூட இல்லாமல் வட்டியும் அசலையும் கேட்டு தற்கொலைக்கு துண்டிய இந்திரா மற்றும் தங்கம்மாள் உள்ளிட்ட மூன்று பேர் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து சட்டப்படி தண்டனையை அவர் களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். கந்து வட்டி கொடுமை யினை ஒழிக்க உரிய நடவடிக்கை யினை அரசும் காவல் துறை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். பெற் றோரை இழந்து வாடும் குழந்தை களுக்கு உரிய சமூக பாதுகாப்பினை அரசு வழங் கிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மீனாம்பாள்புரம் பகுதியில் கந்து வட்டிக் கொடுமை அதிகரித்துள்ளது . அவற்றை தடுக்க அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர் களுக்குசட்டப்படி கடுமையான தண் டனை வழங்கிடவேண்டும். பெற் றோரை இழந்த இரண்டு குழந்தை களுக்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்கி பாதுகாத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு - 2 பகுதிக் குழு செயலாளர் ஏ. பாலு வலியுறுத்தி னார்.
மேலும் இந்த தற்கொலை குறித்து உரிய நடவடிக்கையை காவல்துறை யினர் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற் றும் சிவபிரகாஷ் - பிரேமலதா குடும்பத்தின் சார்பிலும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் காவல்து றையிடம் புகார் மனு அளித் துள்ளோம் என்று கூறினார்.