districts

img

வறுமைக்கோடு பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டுமே நூறுநாள் வேலையா?

புதுக்கோட்டை, டிச.7-  நூறுநாள் வேலைத் திட்டத்தில் வறுமைக்கோடு பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டுமே வேலை என்பதைக் கண்டித்து விவசாயத் தொழிலாளர்கள் வியா ழக்கிழமையன்று புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தினர். மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டத்தில் வருடத்திற்கு 200 நாட்கள் வேலையும், கூலியை ரூ.600-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வரு கின்றன. ஆனால், மோடி தலைமையி லான ஒன்றிய அரசோ இருக்கின்ற வேலைகளையும் பறிக்கும் வகையில் இத்திட்டத்திற்கான நிதியை ஆண்டுதோறும் குறைத்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், வறுமைக்கோடு பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டுமே வருடத்திற்கு நூறு நாள்வேலை எனக்கூறி, வேலை  அட்டையில் அதற்கான முத்திரை யையும் பதிக்கப்பட்டு வருகிறது. இதனால், விவசாயத் தொழி லாளர்களில் பெரும்பகுதியினர் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட் டுள்ளது. மேலும், வறுமைக்கோடு பட்டியல் தயாரிப்பதிலேயே பல்வேறு குளறுபடிகளும், தவறு களும் தொடர்ந்து நடந்து வரு வதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேங்கிடக்குளம், கத்தக்குறிச்சி ஊராட்சியைச் சேரந்த்த விவசாயத் தொழிலாளர்கள் அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் தலைமையில் வறுமைக்கோடு பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டுமே வேலை என்பதை அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி வியாழக் கிழமையன்று போராட்டம் நடத்தினர். திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை யிட்டு நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் துரை.பாண்டியன் தலைமை வகித்தார். போராட்டத் தில் மாவட்டச் செயலாளர் டி. சலோமி, ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டிச் செல்வி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். போராட்டத்தைத் தொடர்ந்து  அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் வறுமைக்கோடு பட்டியலில் உள்ள அட்டை களைத் தனியாகப் பிரித்து முத்திரை வைப்பதை மறுபரி சீலனை செய்வது, இதுநாள் வரை நிலுவையில் உள்ள கூலிப் பாக்கியை விரைவில் வழங்குவது, வருடத்திற்கு முழுமையாக நூறு நாட்கள் வேலை வழங்குவதற்கு அதிகாரிகள் ஒப்புதல் தெரிவித்த னர். இதனைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக்கொள்ளப் பட்டது.