districts

img

நூறுநாள் வேலைத் திட்டத்தை பேரூராட்சிகளிலும் அமல்படுத்துக

திருச்சிராப்பள்ளி, ஜூலை 25 -

     அரசு அறிவித்தபடி நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்தி பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளுக்கு நூறுநாள் வேலைத்திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி அகில இந்திய விவசாயத்  தொழிலாளர் சங்கத்தின் சார்பில்  மாநிலம் முழுவதும் செவ்வாய்க் கிழமை பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடை பெற்றது.

    இதனொரு பகுதியாக டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவா ரூர், திருச்சிராப்பள்ளி, புதுக் கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடு துறை உட்பட பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

    திருச்சி மாவட்டம் மண்ணச்ச நல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மண்ணச்சநல்லூர் ஒன்றியச் செய லாளர் செல்வம் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் சந்திரன், மாவட்டத் தலைவர் ஜெ.சுப்ரமணியன், தமிழ் நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் முருகேசன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் மனோகரன், கட்டுமான சங்க மாவட்டச் செய லாளர் பூமாலை, மாதர் சங்க மாவட்டத்  தலைவர் லிங்கராணி உள்ளிட்டோர் பேசினர்.  

    விவசாயத் தொழிலாளர் சங்க  மாநிலச் செயலாளர் சங்கர் போராட் டத்தை துவக்கி வைத்து சிறப்புரை யாற்றினார். பின்னர் மண்ணச்ச நல்லூர் பேரூராட்சி நிர்வாக அலு வலர் சின்னசாமியிடம், ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் தனித்தனியே மனுக்களை கொடுத்தனர்.

அன்னவாசல்

      புதுக்கோட்டை மாவட்டம் அன்ன வாசல் பேரூராட்சி அலுவலகம் முன்பு  நடைபெற்ற போராட்டத்திற்கு விதொச  அன்னவாசல் ஒன்றியச் செயலா ளர் எம்.ஜோஷி தலைமை வகித்தார்.  போராட்டத்தை தொடங்கி வைத்து மாவட்டப் பொருளாளர் கே.சண்முகம் பேசினார். போராட்டத்தை நிறைவு  செய்து மாநில பொதுச் செயலா ளர் வீ.அமிர்தலிங்கம் சிறப்புரை யாற்றினார். கோரிக்கைகளை விளக்கி  மாவட்டச் செயலாளர் டி.சலோமி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா மற்றும் நிர்வாகிகள் பேசினர்.

    ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட மனுக்கள்  பேரூராட்சி செயல் அலுவலர் ராதா கிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டன.

பேரளம்

     திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் பேரளத்தில் நடைபெற்ற மனு கொடுக்கும் போராட்டத்தில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவரும், சிபிஎம் சட்ட மன்ற உறுப்பினருமான எம்.சின்ன துரை பங்கேற்றார். போராட்டத்திற்கு அமைப்பின் நகரச் செயலாளர் பி.ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்த னர். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே.எம்.லிங்கம், நகரச் செயலாளர் சீனி.ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஐ.முகமதுஉதுமான் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் சரவண. சதிஷ்குமார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

     முன்னதாக பேரளம் ரயில் நிலையம் அருகிலிருந்து, பேரணி யாக புறப்பட்டு பேரூராட்சி அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இறுதியாக பேரளம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளிக்கப் பட்டது.

தரங்கம்பாடி

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம் பாடி பேரூராட்சி பகுதியில் நூறு  நாள் வேலைத் திட்டத்தை அமல் படுத்தக் கோரி பொறையார் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தின் ஒன்றியச் செயலாளர் கே.தமிழ் வாசகம் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் எம்.முருகையன், மாவட்டத் தலைவர் காபிரியேல், விவ சாய சங்க ஒன்றிய செயலாளர் என். சந்திரமோகன் உள்ளிட்டோர் கோரிக் கைகளை வலியுறுத்தி உரையாற்றி னர். இறுதியாக, பேரூராட்சி அலுவல கத்தில் மனுக்களை அளித்தனர்.

திட்டச்சேரி

     நாகப்பட்டினம் மாவட்டம் திரு மகல் ஒன்றியம் திட்டச்சேரி பேரூராட்சி யில் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை அமல்படுத்தக் கோரி வி.தொ.ச. ஒன்றியச் செயலாளர் ஜி. பாரதி தலைமையில் மனு கொடுக் கும் போராட்டம் நடைபெற்றது. சிபிஎம்  நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரி முத்து, விதொச மாநில துணைத் தலைவர் ஜி.ஸ்டாலின், மாவட்டத் தலைவர் கே.சித்தார்த்தன், சிபிஎம்  ஒன்றியச் செயலாளர் ஜி.எஸ்.ஸ்டாலின் பாபு, மாவட்ட துணைச் செய லாளர் டி.துரைராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர்.