districts

வீட்டுமனைப் பட்டா வழங்க கோரிக்கை

அறந்தாங்கி, ஜூலை 26-

    நீண்ட நாட்களாக அரசு புறம்போக்கு நிலங்களில் வீடு  கட்டி குடியிருக்கும் அனைவருக்கும் வீட்டுமனை பட்டா  வழங்கக் கோரி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங் கியை அடுத்த ரெத்தினகோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

    வேண்டும். ரெத்தினகோட்டையில் இருந்து பட்டுக் கோட்டை சாலை வரை குண்டும் குழியுமாக உள்ள  சாலையை உடனே செப்பனிட வேண்டும். விவசாய  விளைநிலங்கள் மற்றும் பொதுமக்கள் வீடுகள் பாதிக்காத  வகையில் அறந்தாங்கி நகர் புறவழிச்சாலையை அமைக்க  வேண்டும். ரெத்தினகோட்டை புது குடியிருப்பு மக்க ளுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டும். தாழ்வாக தொங்கி கொண்டிருக்கும் மின் கம்பிகளை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் பால கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்  எஸ்.கவிவர்மன், தாலுகா செயலாளர் தென்றல் கருப் பையா, மாவட்ட குழு உறுப்பினர் கே.தங்கராஜ், சிபிஎம்  வழக்கறிஞர் சங்க மாவட்டத் தலைவர் அலாவுதீன், விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் நாராயணமூர்த்தி, வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பாண்டி  உள்ளிட் டோர் பேசினர்.  

     இறுதியாக, ரெத்தினகோட்டை கிளை சார்பாக தீக்கதிர் அரையாண்டு சந்தா 4 உட்பட 10 தீக்கதிர் சந்தா  மாவட்டச் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.