districts

img

வீடற்ற ஏழைகளுக்கு கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டித் தரப்படும்

தஞ்சாவூர், ஏப்.7 - வீடற்ற ஏழை மக்களுக்கு, கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின்கீழ் வீடு கட்டித் தரப்படும் என்றார் தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பா ளர் ச.முரசொலி. இந்தியா கூட்டணி சார்பில், தஞ்சை  நாடாளுமன்றத் தொகுதியில் போட்டி யிடும் திமுக வேட்பாளர் ச.முரசொலி,  பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக் குட்பட்ட சேதுபாவாசத்திரம் கடைவீதி, மல்லிப்பட்டினம், புதுப்பட்டினம், பள்ளத் தூர், பூவாணம், கட்டையங்காடு, செரு பாலக்காடு, அழகியநாயகிபுரம், நாடி யம், வீரியங்கோட்டை, குருவிக் கரம்பை, வாத்தலைக்காடு, பூக்கொல்லை, ரெட்டவயல், கொளக்குடி, உடையநாடு,  சம்பைபட்டினம், செந்தலைப்பட்டினம், சோழகனார்வயல் உள்ளிட்ட பல்வேறு  இடங்களில் தீவிரமாக வாக்குச் சேகரித்தார்.  அப்போது அவர் பேசுகையில், “மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் ரூ.70  கோடியில் தூண்டில் வளைவு அமைக் கப்படும். கடற்கரை முகத்துவாரங்கள் தூர்வாரப்படும். மீனவர்கள் கோரிக் கையை ஏற்று மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்பட்டுள் ளது. மீனவர்கள் கோரிக்கைகள் அனைத் தும் நிறைவேற்றித் தரப்படும். வீடற்ற ஏழை மக்களுக்கு, கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின்கீழ் வீடு கட்டித் தரப்படும். தமிழ்நாட்டு மக்களுக்கான அனைத்து நலத் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்றால், மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். எனவே  உதயசூரியன் சின்னத்தில் போட்டி யிடும் என்னை ஆதரித்து வெற்றி பெறச்  செய்யுங்கள்” என்றார். பிரச்சாரப் பயணத்தில், திமுக  தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாள ரும், பட்டுக்கோட்டை எம்எல்ஏவுமான கா.அண்ணாதுரை, தலைமைச் செயற்குழு உறுப்பினரும், பேராவூரணி  எம்எல்ஏவுமான நா.அசோக்குமார், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிங்காரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர்.சி.பழனி வேலு மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், கலந்து கொண்டனர்.