அரியலூர், அக். 21- பணியின் போது உயிரிழந்த காவல் துறை யினர் மற்றும் சீருடை பணியாளர்கள் நினை வாக ஆண்டுதோறும் அக். 21 அன்று காவ லர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது. அதன்படி அரியலூர் ஆயுதப்படை மைதானத்திலுள்ள நினைவுச் சின்னத் தில் மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா, மாவட்ட காவல் கண்காணிப் பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பா ளர்கள் விஜயராகவன் (மதுவிலக்குப் பிரிவு), அந்தோணி ஆரி (இணையக் குற்றப்பிரிவு), துணைக் காவல் கண்கா ணிப்பாளர்கள் சங்கர்கணேஷ், ரவிச்சந்தி ரன் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ஆயுதப்படை காவல் ஆய்வாளர் பாலு தலைமையிலான படையினர், 66 குண்டுகள் முழங்க வீர வணக்கம் செலுத்தினர்.