மதுரை, டிச.10- குழந்தை மாயமானது தொடர்பான புகார்கள் வரும் போது உடனடியாக பெற்றோர்களின் மரபணு (டிஎன்ஏ) விப ரங்களை சேகரித்து டேட்டா வங்கியில் பாதுகாக்க வேண்டும் என உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள் ளது. நெல்லையை சேர்ந்த கணவன், மனைவி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை யில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ‘‘எங்களுக்கு குழந்தை இல்லை. ஒரு குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்து அதற்காக 1.8.2022-ல் பதிவு செய்தோம். இந்நிலை யில் திருமணமாகாத பெண் ஒருவருக்கு பிறந்த ஆண் குழந்தை எங்களுக்கு கிடைத்தது. அந்த குழந்தைக்கு பிறப்பு சான்றி தழ் பெற முயன்ற போது சட்டப்படி தத்தெடுக்காமல் குழந்தையை வளர்த்து வருவதாக வி.கே.புரம் போலீ ஸார் எங்கள் மீது வழக்கு பதிவு செய்த னர். பின்னர் குழந்தையை மாவட்ட சமூ கப்பணிகள் இயக்குநர் வசம் ஒப்ப டைத்தனர். அந்த குழந்தையை சட்டப் படி தத்தெடுக்க அனுமதி கோரி 3.3. 2023-ல் மனு அனுப்பினேன். அந்த மனு அடிப்படையில் குழந்தையை சட்டப்படி தத்தெடுக்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்’’ எனக் கூறப்பட்டிருந்தது. மனுவை சனிக்கிழமை அன்று விசா ரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘‘சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தில் குழந்தை தத்தெடுப்பு குறித்து கூறப்பட்டுள்ளது. மனுதாரர்கள் சட்டப்படியான குழந்தை தத்தெடுப்பு முறைகளை பின்பற்ற வில்லை. இருப்பினும் அந்த குழந்தை 6 மாதமாக மனுதாரர்களின் பராம ரிப்பில் இருந்துள்ளது. குழந்தை கடத்தப்பட்டிருந்தால் அந்த குழந்தையை மீட்டு உண்மை யான பெற்றோரிடம் ஒப்படைப்பது தான் நியாயமானது.
இங்கு ஒன்றரை ஆண்டுகள் முடிந்துவிட்டது. ஆனால், காவல்துறையினர் இன்னும் உண்மை யை கண்டுபிடிக்கவில்லை. குழந்தைகள் மாயம் தொடர்பாக ஏராளமான புகார்கள் பதிவாகி வரு கின்றன. குழந்தை மாயம் தொடர்பான புகார்கள் வரும் போது, உடனடியாக பெற்றோர்களின் மரபணு (டிஎன்ஏ) விபரங்களை சேகரித்து டேட்டா வங்கி யில் பாதுகாக்க வேண்டும். குழந்தை மீட்கப்படும் போது குழந்தையின் டிஎன்ஏவுடன் டேட்டா வங்கியில் இருக்கும் பெற்றோரின் டிஎன்ஏ விபரங்களை ஒப்பிட்டு பார்த்து முடிவெடுக்க முடியும். இது தொடர்பாக உள்துறை செயலா ளரும், ஏடிஜிபி (பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு)-ம் அதிகாரி களுக்கு உரிய உத்தரவுகளை பிறப் பிக்க வேண்டும். இந்த உத்தரவு நிறை வேற்றப்பட்டது தொடர்பாக உயர்நீதி மன்ற பதிவுத்துறையில் 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் குழந்தை கடத்தப்படா விட்டால் மனுதாரர்கள் குழந்தையை சட்டப்படி தத்தெடுக்க அனுமதிக்க வேண்டும். இந்த வழக்கில் வி.கே.புரம் காவல் ஆய்வாளர் எதிரிகளுக்கு சம் மன் அனுப்பி விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடிக்க வேண்டும். விசாரணையை முடித்து 3 மாதத்தில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர் குழந்தையை தத்தெ டுக்கும் வகையில் மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தின் விதிகளை தளர்த்த வேண்டும்’’ என உத்தரவிட்டார்.