மதுரை, மார்ச் 22- சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனார் கோவை சிறையில் இருந்த போது இழுத்த செக்கை, தூத்துக்குடி ஒட்டப்பிடா ரத்தில் உள்ள வ.உ.சி., நினை விடத்தில் வைக்க உத்தர விட வேண்டும் என கோரிய வழக்கில் தமிழக அரசு பரி சீலிக்க சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்த ரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குமரன் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் பொது நல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘‘தூத் துக்குடி மாவட்டம் ஒட்டப் பிடாரம் பகுதியை சேர்ந்த வர் சுதந்திர போராட்ட வீர ரும் செக்கிழுத்த செம்மலும் ஆகிய வ.உசிதம்பரனார். வ.உ.சி., சுதந்திரத்திற்காக போராடியதால், அவர் மீது பல வழக்குகள் பதிவு செய் யப்பட்டு அவர் கோயம்புத் தூர் சிறையில் அடைக்கப் பட்டு தண்டனை அனுபவித் தார். அதனொரு பகுதியாக, அவர் கோவை சிறையில் செக்கு இழுத்து தண்டனை யை அனுபவித்து வந்தார். இந்த செக்கு, கோவை மத் திய சிறையில் அவர் நினைவு சின்னமாக வைக்கப்பட்டுள்ளது. வரலாற்று சான்றாகவும் முக்கியத்துவம் வாய்ந்த செக்கினை நம் நாட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் நேரடியாக பார்த்து அறிய வேண்டும். எனவே, கோவை சிறையில் உள்ள வ .உ.சி., இழுத்த செக்கை, தூத்துக்குடி ஒட்டப்பிடா ரத்தில் உள்ள வ.உ.சி., நினை விடத்தில் கொண்டு வந்து வைக்க உத்தரவிட வேண் டும்’’ என கூறப்பட்டிருந்தது. இந்த பொது நல மனு நீதிபதிகள் கிருஷ்ண குமார், விஜயகுமார் அமர்வில் புத னன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், கோவை சிறையில் வ.உ.சி., தண் டனை அனுபவித்து இழுத்த செக் போன்று சென்னை யிலும் பொது மக்கள் பார் வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களும் கோவையில் இருந்து செக்கைமாற்ற எதிர்ப்பு தெரி விக்கின்றனர் என வாதிட்டார். அப்போது நீதிபதிகள், மனு தாரரின் மனு குறித்து நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. தமி ழக அரசு பரிசீலிக்கும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.