districts

img

குமாரபாளையத்தில் கனமழை: வீடு சேதம்

நாமக்கல், மே 12- குமாரபாளையத்தில் பெய்த கனமழை யால் ஓட்டு வீடு ஒன்று இடிந்து சேதமடைந் தது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த  இரண்டு மாதங்களாக கோடை வெயில் மக் களை வாட்டி வதைத்தது. வெயிலின் தாக் கத்தால் வெளியே வர தயங்கிய பொதுமக் கள் பெரும் அவதியடைந்து வந்தனர். இந்நி லையில், குமாரபாளையம் மற்றும் அதன் சுற் றுப்புற பகுதிகளான காவேரி நகர், சின்னப் பநாயக்கன்பாளையம், எம்.ஜி.ஆர் நகர், குப் பாண்டபாளையம், தட்டான் குட்டை, எதிர்  மேடு, வளையக்காரனூர் உள்ளிட்ட பகுதிக ளில் சனியன்று மாலை திடீரென கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் பெய்த கன மழையின் காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடியது.  இதனால் கோடை வெயிலின் தாக்கம் சற்று  குறைந்தது. இதனிடையே, குமாரபாளையம்  கலைமகள் வீதி, மின் மயானம் எதிரில் லட் சுமி என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீடு  மழையில் இடிந்து சேதமானது. சேத மதிப்பு  குறித்து வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர். மருத்துவமனையில் தேங்கும் மழைநீர் ராசிபுரம் பகுதியில் சனியன்று மாலை பர வலாக மழை பெய்தது. தொடர்ந்து அதிக  மழை பெய்ததின் காரணமாக, ராசிபுரம் அரசு  மருத்துவமனை பிரசவ வார்டு உள்ளிட்ட பல் வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.  இதனால் கர்ப்பிணி மற்றும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனையடுத்து தன்னார்வ அமைப்பினர், மருத்துவமனை ஊழியர்கள், நகராட்சி ஊழியர்கள் ஆகி யோர் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்ட னர். மேலும், போர்க்கால அடிப்படையில் மழைநீர் தேங்காத வண்ணம் உரிய நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும் என நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.