districts

img

ஆரோக்கியமான வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி

நாகர்கோவில், ஜன.19- இந்திய அஞ்சல் துறை மற்றும்  விளையாட்டு ஆணையம் சார்பில் சண்டேஸ் ஆண் சைக்கிள் என்ற  தலைப்பில் இந்திய மக்களி டையே, பசுமையான மற்றும் ஆரோக்கியமான இந்தியாவிற்கான உடற்பயிற்சி சூழல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் கன்னியாகுமரி கோட்ட கண்காணிப்பாளர் க.செந்தில்குமார் வழிகாட்டுதலின்படி மிதிவண்டி பேரணி நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக நடை பெற்றது. இதனை நாகர்கோவில் முது நிலை தபால் அதிகாரி சு.சுரேஷ் கொடி அசைத்து தொடங்கி வைத் தார்.  இந்நிகழ்ச்சியில் அஞ்சல் துறை  தபால் அதிகாரிகள் பரமேஸ்வரன். ஜாய்ஸ் மற்றும் ஊழியர்கள் 50 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.