பாபநாசம், செப்.5- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சரபோஜி ராஜபுரம் ஊராட்சியில், பழுதடைந்த நிலையில் இருந்த துணை சுகாதார நிலையம் இடிக்கப்பட்டது. புதிய கட்டடம் கட்டுவதற்கு எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி 2024-25-ல் ரூ.44.40 லட்சத்தை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா ஒதுக்கீடு செய்துள்ளார். கட்டடம் அமையவுள்ள இடத்தை அவர் நேரில் பார்வையிட்டார். பாபநாசம் பி.டி.ஓ சிவக்குமார், பொறி யாளர் சுவாமிநாதன் ஆகியோர் கட்டட வரைபடத்தின் மூலம் திட்டத்தை எம்எல்ஏவுக்கு விளக்கினர். எம்.எல்.ஏ உதவியாளர் ரிபாயி, திமுக இளைஞரணி நிர்வாகி கள் மணிகண்டன், மணிமாறன், கலை, இலக்கிய அணி நிர்வாகி முபாரக் ஹுசைன் உட்பட பலர் உடனி ருந்தனர்.