ஆட்சியரிடம் சிபிஎம் மனு பெரம்பலூர், செப்.11 - பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் திங்களன்று ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சி யர் க.கற்பகம் தலைமையில் நடை பெற்றது. அப்போது மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் தலைமையில் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அம்மனுவில், “பெரம்பலூர் மாவட் டம் குன்னம் வட்டம் பெண்ணக்கோ னம் கிராமம் ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி செல்வம். கடந்த 7.8.2023 அன்று அதே ஊரை சேர்ந்த வேறு சாதியைச் சேர்ந்த பரம சிவம் என்பவர், மாற்றுத்திறனாளி செல்வம் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த செல்வம் உயி ருக்கு ஆபத்தான நிலையில் பெரம்ப லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளது. ஆனால் போலீசார் உடனடி யாக நடவடிக்கை எடுக்காமல் அலட்சி யம் காட்டியதால், குற்றவாளியான பரம சிவம் வெளிநாடு தப்பிச் சென்று விட்டார். இக்கொடூரத்திற்கு உடந்தை யாக இருந்த அதே பகுதியை சேர்ந்த உலகநாதன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பலத்த காயமடைந்த மாற்றுத்திறனாளி செல்வம் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சி யர், உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார். மனு கொடுக்கும் போது, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட அமைப்பாளர் ராஜசேகர், சிபிஎம் குன்னம் வட்டச் செயலாளர் சி. செல்லமுத்து உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.