திருச்சிராப்பள்ளி, ஜூலை 24 - மின் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் அரிக்கேன் விளக் கேந்தி ஆர்ப்பாட்டம் நடத்தி னர். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்க வேண்டும். மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். மாதம் ஒருமுறை மின்சார அளவை கணக்கீடு செய்ய வேண்டும். ஒன்றிய அரசின் தனி யார் மயத்திற்கு தமிழ்நாடு மின்வாரியம் பலி யாவதை தடுக்க வேண்டும். அரவக்காடு பகுதி ரயில்வே கீழ்பாலத்தின் மின்சார கேபிளை சீர்படுத்தி தடையற்ற மின்சா ரத்தை அரசு மருத்துவமனை, பள்ளி மற்றும் வீடுகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியக் குழு சார்பில் செவ்வாயன்று அரவக்காடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரிக்கேன் விளக்கேந்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக் குழு உறுப்பி னர் பொன். வேலுச்சாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்ட செயற் குழு உறுப்பினர் மாறன், மாவட்டக் குழு உறுப்பினர் சங்கர், ஒன்றியச் செயலாளர் தங்கராஜ் ஆகியோர் கண்டன உரையாற் றினர். ஒன்றியக் குழு உறுப்பினர் ஏழுமலை நன்றி கூறினார்.