மதுரை, மே 5-
மதுரை மாவட்டம் உசி லம்பட்டி அருகே தொட்டப்ப நாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட அம்பாசமுத்திரம் கிராமத்தில் கரும்பு வெட்டும் வேலைக்கு மகாராஷ்டிரா மாநிலம் பீட் மற்றும் பர்பானி மாவட்டங்களைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் ஒப்பந்த அடிப்ப டையில் அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.,
இவர்களுக்கு குறைந்த கூலி வழங்கு வதாகவும், இருப்பிடம் மற்றும் உணவு கள் என எந்த அடிப்படை வச திகளும் முறையாக வழங் கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் தின மும் காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை வேலை செய்ய கட்டாயப்படுத்து வதாகவும், ஒப்பந்ததாரர் பேசியபடி கூலி தாராமல் காலம் தாழ்த்தி வருவதாக வும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஷால் சுரேஷ் கஸ்பே என்ப வர் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் ஏஐசிசிடியூ அமைப்பைச் சேந்தவர்கள் மூலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக் கப்பட்டது. மாவட்ட ஆட்சி யர் அனிஸ்சேகர் உத்தர வின் அடிப்படையில் உசி லம்பட்டி வட்டாட்சியர் சுரேஷ் பிரடிக் கிளைமென்ட் தலைமையில் அதிகாரிகள் அம்பாசமுத்திரம் கிரா மத்தில் கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டவர்களி டம் ஆய்வு மேற்கொண்டு விசாரணை மேற்கொண் டார்.
இதில் உசிலம்பட்டி வட்டாட்சியர் சுரேஷ் பிரடிக் கிளைமென்ட் மற்றும் காவல் ஆய்வாளர் ஆனந்த் ஆகி யோர் தலைமையிலான அதி காரிகள் தேனி மாவட்டத்தில் உள்ள ராஜாஸ்ரீ சா்க்கரை ஆலை நிர்வாகத்திடம் பேசி அந்த 7 நபர்களை சொந்த மாநிலமான மகாராஷ்டிரா விற்கு அனுப்பிவைக்க ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது.