அரியலூர், ஜன.19- ஜெயங்கொண்டம் அருகே ஏரியில் பிணமாக மீட்கப்பட்ட இன் ஜினீயரின் உடல் பிரேத பரி சோதனை செய்யப்பட்டு உறவினர்க ளிடம் ஒப்படைக்கப்பட்டது. காதல் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயங்கொண்டம் அருகே உள்ள முன்னூரான்காடுவெட்டி கிரா த்தை சேர்ந்த பட்டுசாமி- கம்சலை தம்பதியின் மகன் அழகேசன் (19). சிவில் இன்ஜினீயரிங் பட்டய படிப்பு முடித்துள்ளார். தாய்-தந்தை இறந்துவிட்ட நிலையில் அழகேசன் தனது பெரியம்மாள் கவுசல்யா குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக வும், அதன் காரணமாக சிலருடன் முன்விரோதம் இருந்ததாகவும், அந்த பெண்ணை மற்றொரு வாலிப ரும் காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திங்களன்று முன்னூரான்காடு வெட்டியில் உள்ள ஆசனேரியில் ரத்த காயத்துடன் அழகேசன் உடல் கண்டெடுக்கப் பட்டது. இதையடுத்து அவரது உடலை காவல்துறையினர் கைப் பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அழகேசன் கொலை செய்யப்பட்டதாக கூறி ஒரு வாலி பரை கிராம மக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். ஆனால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யாததால் ஆத்திரமடைந்த அவரது உறவினர் கள் மற்றும் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறை யினர் பேச்சுவார்த்தை நடத்தி அவர் களை கலைந்து போக செய்தனர். இந்நிலையில் அழகேசன் உடல் பிரேத பரிசோதனை செய் யப்பட்டு, செவ்வாயன்று அவரது பெரியம்மாள் கவுசல்யாவிடம் ஒப்ப டைக்கப்பட்டது.