districts

img

மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் மறியல்

மயிலாடுதுறை ஜூலை-11 குறைதீர்க்கும் கூட்டத் தை நடத்தாமல் புறக்க ணித்து வரும் கோட்டாட்சி யரை  கண்டித்து மயிலாடு துறை கோட்டாட்சியர் அலுவ லகம் முன்பு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின் சார்பில்  சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.  மாதந்தோறும் இரண்டா வது வியாழக்கிழமை  மாற்றுத்திறனாளிகள் குறை தீர் கூட்டத்தை நடத்துவது வழக்கமான ஒன்று.  கடந்த பல மாதமாக குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்தாமல் புறக்கணித்து வரும் கோட் டாட்சியரை  கண்டித்து வியா ழனன்று மனு கொடுக்க வந்து ஏமாற்றமடைந்த மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட தலை வர் டி.கணேசன் தலைமை யில்  சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர்.  மாவட்ட இணைச்செயலாளர் எம். சொக்கலிங்கம், மயிலாடு துறை வட்ட பொறுப்பு செயலாளர் வி .சிதம்பரம், இணைச் செயலாளர் சுந்தர பாண்டியன், சாருமதி வட்ட தலைவர் யூ. ராஜேந்திரன் மற்றும் மனு கொடுக்க வந்து ஏமாற்றமடைந்த மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில்  கலந்து கொண்டனர். போராட்டத் தையடுத்து   நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அடுத்த வாரம் முதல் முறையாக குறை தீர் கூட்டம் நடத்து வதாக அரசு அதிகாரிகள் உறுதியளித்தனர்,இதன்  அடிப்படையில் போராட் டத்தை விலக்கிக் கொண்ட னர்.மாற்றுத்திறனாளிகள் அளிக்க வந்த  மனுக்களை கோட்டாட்சியரின்  நேர்முக  உதவியாளர் பெற்றுக் கொண்டு  ஒப்புதல் வழங்கினார்.