districts

குட்கா பதுக்கிய வியாபாரி கைது

திருச்சிராப்பள்ளி, ஜூன் 5-  

     திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அரியூர்  காளியம்மன் கோவில் அருகாமையில் தடை செய்யப் பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக லால்குடி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

     இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். இதில், 27.5 கிலோ எடை கொண்ட அந்த குட்கா பொருட்களை கைப்பற்றினர். விசார ணையில், புகையிலைப் பொருட்களை  பக்ருதீன் (49 ) என்பவர் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.