districts

img

மாணவர்கள் கல்லூரியில் சேர வழிகாட்டு நிகழ்ச்சி

 

 இராமநாதபுரம்,ஜூன் 29-

    இராமநாதபுரம் புனித அந்திரேயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிகல்வித்துறையின் மூலம் நான் முதல்வன்-கல்லூரி கனவு 2022-2023 கல்வியாண்டில் மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரிக்கு செல்லாத மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்வதற்கான வழிகாட்டும் நிகழ்ச்சி ஜூன் 26 அன்று நடைபெற்றது.  

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையேற்று மாண வர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியே துவக்கி வைத்தார்.  

   ஆட்சியர் பேசுகையில் ,இராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை நடப்பாண்டில் 687 பேர்  மேல்நிலை பள்ளி கல்வியோடு நின்று உள்ளதை கண்டறிந்து அவர்களுக்கு விருப்பம் போல் தொழில்  கல்வி மற்றும் உயர்க்கல்வி படிப்பிற்கு வழிகாட்டு தலை வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கல்விக்கு  தேவையான கட்டண செலவுகளை வங்கிகள் மூலம் கடனுதவி பெற்று தரவும் ஏற்பாடு செய்யப்  பட்டுள்ளது. இந்த முகாமில் தங்களுக்கு தேவை யான வருவாய்ச்சான்று, வங்கி கடனுதவி போன்ற வற்றை அரசே வழங்கிட தக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இத்திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டுமென ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

     இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி  அலுவலர் பாலுமுத்து, மாவட்ட வேலை வாய்ப்பு  அலுவலர் மதுக்குமார் , ஆதிதிராவிடர் -பழங்குடி யினர் நல அலுவலர் அன்னம்மாள் மற்றும் அரசு அலு வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.