திருவாரூர், டிச.29 - திருவாரூர் மாவட்டத் தில், குடவாசலில் இருந்து திருவாரூர் வழியாக சென்ற பேருந்தை மீண்டும் இயக் கிட வேண்டும் என வலி யுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பாக பொதுமக்களிடம் கையெ ழுத்து இயக்கம் நடத்தப் பட்டது. இம்மனுக்கள் கும்ப கோணம் அரசு போக்கு வரத்து கழகத்தின் பொது மேலாளரிடம் அளிக்கப் பட்டன. கடந்த இரு தினங்களாக குடவாசல் ஒன்றியத்தில் உள்ள கடமாங்குடி, பிலா வடி மற்றும் திருவிடச்சேரி உள்ளிட்ட பகுதியில் உள்ள பொதுமக்களிடம் நேரில் சென்று குடவாசல் - திருவா ரூர் வழியாக சென்ற “402-பி” என்ற பேருந்தை மீண்டும் செயல்படுத்த கோரி சிபிஎம் குடவாசல் (தெற்கு) ஒன்றி யச் செயலாளர் டி.லெனின், ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் எம்.கோபிநாத், கே.ஆறுமுகம் மற்றும் கிளை செயலாளர்கள் பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினர். பொதுமக்களிடம் பெற்ற கையெழுத்து பிரதிகளை கோரிக்கை மனுவுடன் இணைத்து கும்பகோணம் பொது மேலாளிடம் அளித்த னர். அம்மனுவில், “கும்பகோ ணம் - நாச்சியார்கோவில் - கடமாங்குடி, பிலாவடி, வட வேர் மற்றும் பெரும்பண் ணையூர் வழியாக திருவா ரூர் சென்று வந்த தடம் எண்-402-பி என்ற பேருந்தை மீண்டும் இயக்கிட வேண்டும். மேற்கண்ட வழித் தடத்தில் இயங்கிய பேருந்து, பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர் களுக்கு மிகவும் பய னுள்ளதாக இருந்தது. இவ்வழித்தடத்தில் வேறு பேருந்து வசதியும் கிடை யாது. எனவே பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக பேருந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண் டும்” என தெரிவிக்கப் பட்டுள்ளது.