districts

img

நூறு நாள் வேலையை உத்தரவாதப்படுத்துக! மாற்றுத்திறனாளிகள் சங்க தரங்கம்பாடி ஒன்றிய மாநாடு வலியுறுத்தல்

மயிலாடுதுறை, பிப்.27-  மயிலாடுதுறை மாவட்டம் ஆயப்பாடியில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தரங்கம்பாடி வட்ட மாநாடு ஒன்றிய தலைவர் ஜி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. ஏ.ஆனந்தராஜ் சங்க கொடியினை ஏற்றி வைத்தார்.  ஒன்றியக் குழு உறுப்பினர் ஜி.லெட்சுமி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட செயலாளர் டி.கணேசன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். விவசாய சங்க மாவட்டத்தலைவர் டி.சிம்சன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் காபிரியேல், கட்டுமான சங்க ஒன்றிய செயலாளர் குணசேகர், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் டி.ஆர்.ராணி, வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் ஐயப்பன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி உரையாற்றினர். நூறு நாள் வேலையை மாற்றுத்திறனாளிகளுக்கு உத்தரவாதப்படுத்த வேண்டும். நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் புதிய தலைவராக ஜி.செல்வராஜ், செயலாளராக டி.கோவிந்தசாமி, துணைத் தலைவராக லெட்சுமி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;