districts

img

கடல் வளத்தை அதிகரிக்க பச்சை வரி இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

தஞ்சாவூர், ஆக.8 -  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூ ரணி அருகே மனோரா கடற்கரை யில், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பொரிப்பகங்களில் வளர்க்கப்பட்ட பச்சை வரி இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில், இயற்கையான கடல் வளத்தை புதுப்பிக்கவும், இறால் உற்பத்தி யை அதிகரிக்கவும் மண்டபத்தில் அமைந்துள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம், பச்சை வரி இறால் குஞ்சுகளை, பொரிப்ப கங்களில் வளர்த்து, கடலில் விடும் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறது.  இதனால், இப்பகுதி மீனவர்க ளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்ப டுவதோடு, இப்பகுதியில் நீடித்து இறால் வளத்தை பாதுகாக்கவும், பராமரிக்கவும் வழிவகை செய்யப் படுகிறது.  அதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டே, மத்திய மீன் வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் நிதியுத வியுடன், தமிழ்நாட்டின் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி  கடல் பகுதியில், பச்சை வரி இறால் குஞ்சுகளை, பொரிப்பகங்களில் வளர்த்து, கடலில் விடுதல் என்ற திட்டத்தை மண்டபத்தில் அமைந் துள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் செயல்படுத்தி வருகிறது.  இத்திட்டத்தில் 200 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகளை, தமிழ்நாட்டின் கடல் பகுதியான மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி பகுதிகளில் விடப்படும். இந்நிலையில், மண்டபம் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய தலைவர் வினோத், தஞ்சா வூர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீன வர் நலத்துறை உதவி இயக்குனர் மணிகண்டன், மீன்வள ஆய்வாளர் ஆனந்த், திட்டத்தின் தலைவர் முதன்மை விஞ்ஞானி தமிழ்மணி, மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், விசைப் படகு, நாட்டுப்படகு சங்க நிர்வாகி கள் மற்றும் மீனவர்கள் ஆகியோர் இணைந்து, தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள மனோ ராவில் உள்ள பாக் ஜலசந்தி கடற் பகுதியில் 1.8 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகளை கடலில் விட்டனர்.  இந்நிகழ்ச்சியை, மண்டபம் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி  நிலைய மூத்த விஞ்ஞானி ஜான்சன் ஒருங்கிணைத்தார்.