புதுக்கோட்டை, மே 1-
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையை அடுத்த பழைய கந்தர்வக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மெய்குடிப் பட்டியில் திங்கள்கிழமை நடை பெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, சட்டப்பேரவை உறுப்பினர் எம். சின்னதுரை ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஆட்சியர் பேசுகை யில், ‘‘இன்றையதினம் புதுக் கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் தொழிலா ளர் தினத்தினை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டங்களில் குடிநீர்வசதி, சாலைவசதி, பேருந்துவசதி, கழிப்பறைவசதி போன்ற பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.
கந்தர்வகோட்டை சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்ன துரை பேசும்போது, ‘‘12 மணிநேர வேலைச் சட்டத்தை திரும்பப் பெறு வதாக மேதினத்தில் தமிழ்நாடு முதல்வர் அறிவித்திருப்பதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ள கந்தர்வகோட்டைப் பகுதி யில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க வேண்டும். மருத்துவ மனை, பேருந்துநிலையம், சாலை வசதி உள்ளிட்ட மக்களின் அடிப்ப டைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும்’’ என்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, ஒன்றியக்குழுத் தலைவர் கார்த்திக் (எ) இரா. ரெத்தினவேல், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பொ) பழனிச்சாமி, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, வருவாய் கோட்டாட்சி யர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.