பாபநாசம், ஜூலை 21 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஆர்.டி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 19, 20, 21 ஆவது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் முஹம்மது முகைதீன் அறிமுக உரையாற்றினார். கல்லூரி தலைவர் தாவூத் பாட்சா, முன்னாள் எம்.பி காதர் முகைதீன் பேசினர். சிறப்பு விருந்தினராக இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் எம்.பி அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் பங்கேற்றுப் பேசினார். இதில் 717 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. கல்லூரி உதவி சேர்மன் ரபியா பேகம், நிர்வாக துணை இயக்குநர் சையது ஹுசைன், அறக்கட்டளை அப்ரோசா சுல்தானா உட்பட பலர் பங்கேற்றனர். பட்டமளிப்பு உறுதிமொழியை கல்லூரி துணை முதல்வர் தங்கமலர் வழங்கினார்.