தஞ்சாவூர், அக்.28- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023 -24 ஆம் ஆண்டுக்கான தேசிய தொழிற்சான்றிதழ் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. பட்டுக்கோட்டை கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலைய நிர்வாக அலுவலர் யூ.ஆர். தவமணி வரவேற் றார். பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை தலைமை வகித்து, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றி னார். தஞ்சாவூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சி.தமிழ்நங்கை முன்னிலை வகித்தார். பட்டுக்கோட்டை சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் சுகி.சுவாமிநாதன் வாழ்த்திப் பேசினார். பட்டுக்கோட்டை ஸ்ரீ நாடி பல்நோக்கு மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மருத்துவர் சி.ஜே.ரவி, மருத்துவர் சிவ ராஜ், மூத்த வழக்கறிஞர் ஏ.ஜெயவீர பாண்டியன் உள்ளிட்டோர் பட்டங்களை வழங்கினர். கூட்டுறவு தொழில் பயிற்சி நிலைய முதல்வர் செ.இளங்கோவன் நன்றி கூறினார். விழாவில் மின் பணியாளர், கணிப் பொறி, உணவு தயாரித்தல், தையல் தொழில்நுட்பம், முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 149 பயிற்சியாளர்களுக்கு தொழிற்சான்றி தழ் பட்டங்கள் வழங்கப்பட்டன.