districts

img

எம்ஜிஆர் அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திருவாரூர், மார்ச் 3 - திருவாரூர் மாவட்டம் குடவாசலில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் அரசு கலை அறிவியல் கல்லூரியின் 2 ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடை பெற்றது.பட்டமளிப்பு விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் இ.மாரிமுத்து தலைமை வகித்து  உரையாற்றினார். முனைவர் க.தேஷ் முன்னிலை  வகித்தார். கல்வியாளரும், வரலாற்று அறிஞருமான பேராசிரியர் அ.கருணானந்தம் சிறப்புரையாற்றி, 638 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கள் கலந்து கொண்டனர்.