districts

img

பட்டதாரி ஆசிரியர் தேர்வு: ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர்/கரூர், பிப்.4 - ஆசிரியர் தேர்வு வாரியத் தால் நடத்தப்படும் பட்ட தாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரிய ருக்கான தேர்வு தமிழ்நாடு முழுவதும் ஞாயிறன்று நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத் தில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும்  டோம்னிக் பெண்கள் மேல் நிலைப் பள்ளிகளில் இந்த தேர்வு நடைபெற்றது.  பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சி யர் க.கற்பகம் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் இத்தேர்வுக்கு மொத்தம் 559 பேர் விண் ணப்பித்திருந்தனர். இதில் 545 பேர் தேர்வெழுதிய நிலையில், 14 பேர் தேர்வெ ழுத வரவில்லை. ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், பெரம்பலூர் வட்டாட்சியர் சர வணன் உள்ளிட்டோர் உட னிருந்தனர். கரூர் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற் றுநர்களுக்கான தேர்வு கரூர் மாவட்டம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஞாயிறன்று நடைபெற்றது. தேர்வு நடைபெற்ற மையத்தை மாவட்ட ஆட்சி யர் மீ.தங்கவேல் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.