புதுக்கோட்டை, ஆக.13-
தனது பிறந்தநாளை முன்னிட்டு, தான் பணியாற்றும் அரசுப் பள்ளிக்கு தேவையான உபகரணங்களை ஆசிரி யர் அ.செல்வேந்திரன் வழங்கினார்.
புதுக்கோட்டையை அடுத்த நார்த்தாமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை ஆசிரியராக அ. செல்வேந்திரன் பணியாற்றுகிறார். இவர் தனது 50 ஆவது பிறந்தநாளை சில தினங்களுக்கு முன்பு கொண்டாடி னார். தனது பிறந்தநாளையொட்டி, தான் பணியாற்றும் பள்ளிக்கு சுமார் ரூ.30,000 மதிப்பிலான ஒலிபெருக்கி உள்ளிட்ட உபகரணங்களை தனது தந்தை சா.தோ.அரு ணோதயன் வாயிலாக வழங்கினார். இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் ஏ.ஸ்டீபன் செல்வராஜ், உதவித் தலைமை ஆசிரியர் எம்.ராஜாங்கம் மற்றும் ஆசிரி யர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.