புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அமரகண்டான் குளத்தின் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. அதன் அருகில் இருக்கும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான சின்டெக்ஸ் தொட்டிக்குச் செல்லும் தண்ணீரை, ஒப்பந்ததாரர் சட்ட விரோதமாக கட்டிட கட்டுமானத்திற்கு அதிகளவில் பயன்படுத்துகிறார். அதனை தடுத்து நிறுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பக்ருதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.