districts

img

பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

பெரம்பலூர், செப்.21 - பெரம்பலூரில் தந்தை ரோவர் மேல்நிலைப் பள்ளியில் அரசின் விலை யில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரோவர் கல்வி நிறுவ னங்களில் மேலாண் தலைவர் வரதராஜன்  தலைமை வகித்தார். மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் நல அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுரேஷ், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார்  பள்ளி) லதா ஆகியோர் முன்னிலை வகித்த னர். சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ பிரபா கரன் கலந்துகொண்டு ரூ.15.44 லட்சத்தில் 322  மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி பேசினார்.