districts

img

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம் பேட்டை அருகே கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம் பேட்டை அருகே கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி பட்டுக்குடியில் மூன்றாவது நூலகம் மற்றும்   கூடலூர்,புத்தூர், குடிக்காடு கொள்ளிடக்கரையில்   சுமார் ரூ. 9 லட்சம் மதிப்பில் 46 மின்கம்பங்கள், மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. புத்துரில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் சுற்றுச்சுவர் ,பேவர் பிளாக் அமைத்து  புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில்  ஊராட்சித் தலைவர் ஜெய்சங்கர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தாமரைச் செல்வன், ஊராட்சி ஒன்றியத் தலைவி சுமதி, பிடிஓக்கள் நந்தினி, குமார், ஒன்றியப் பொறியாளர் சாமிநாதன், துணை பிடிஓ தங்கப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.