தருமபுரியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், சேலம் மாவட்டம், அம்மாபேட்டையில் அரசு புறநகர் மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார். இந்த மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நோயாளி அனுமதி சீட்டினை வழங்கி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் ஆட்சியர் ரா.பிருந்தாதேவி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.