விருதுநகர், ஆக.25- இயற்பியலில் சிறந்து விளங்கும் 40 மாணவ, மாணவியர்கள் ஆந்திர மாநி லத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையத்திற்கு 2 நாட்கள் அறிவியல் பயணமாக சென்றனர். விருதுநகர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி களில் பயிலும் மாணவர்களில் சிறந்து விளங்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து, திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாரா பாய் விண்வெளி ஆய்வு மையம், ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையம், மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அருங்காட்சியகம், தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான ஸ்டெம் அறிவியல் பூங்கா, கொடைக்கா னலில் சேக்ரட் ஹாட் இயற்கை அறிவி யில் அருங்காட்சியகம், சூரிய வான் ஆய்வ கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தொடர்ச்சி யாக கல்விச் சுற்றுலாவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்தநிலையில், இயற்பியல் பாடத்தில் சிறப்பாக பயின்று வரும் 40 மாணவ, மாண விகள் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரி கோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையத் தினை பார்வையிட்டனர். விண்வெளி நிலைய விஞ்ஞானிகள், மாணவர்களுக்கு இந்தியாவின் விண்வெளி பயணம் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தனர். பின்பு விண்வெளி மையத்தில் உள்ள இரண்டு ராக்கெட் ஏவு தளங்களையும் பார்வையிடுவதற்கு மாணவர்களை அழைத்துச் சென்றனர். மேலும், இஸ்ரோவில் வேலைக்கு சேர்வது மற்றும் விஞ்ஞானியாக பணியாற்றுவது பற்றியும் பதிலளித்தனர்.