districts

img

மின் விபத்தில் பலியான குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் நிதியுதவி

நாகர்கோவில், அக். 5-       குமரி மாவட்டம் ஆற்றூர் அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பனவிளை அம்பாள் நகரை சேர்ந்தவர் சுந்தரம் மகன் ஸ்ரீசுதன்(32). இவருக்கு கடந்த 10 மாதம் முன்பு திருவட்டார் அருகே ஆற்றூர் பகுதியை சேர்ந்த ஆதிரா (24) என்பவருடன் திருமணம் நடந்தது. ஆதிரா 8 மாதம் கர்ப்பமாக இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆற்றூரில் பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். அக்டோபர் 3 செவ்வாயன்று  வீட்டுக்கு அருகில் மின்சாரம் பாய்ந்து ஆதிரா மற்றும் அவரது தாய், தம்பி ஆகிய 3 பேரும் பரிதாபமாக பலியாகினர். இந்த சோக சம்பவத்தை அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மின்சாரம் தாக்கி பலியானவர் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கெளசிக், குளச்சல் பனவிளை மற்றும் ஆற்றுரரில் உள்ள இரண்டு வீடுகளுக்கும் நேரில் சென்று ஆதிரா கணவர் ஸ்ரீசுதன் மற்றும் தந்தை செம் ஆகியோரிடம்  அதற்கான காசோலையை வழங்கினார்.