கரூர், நவ.17 - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட 13 ஆவது மாநாடு சங்க அலுவலக கூட்டரங்கில் ஞாயி றன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.எஸ்.அன்பழகன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சி.கண்ணன் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஆ.பெரிய சாமி மாநாட்டை துவக்கி வைத்து பேசி னார். மாவட்டச் செயலாளர் பொன் ஜெயராம் வேலை அறிக்கையையும், மாவட்ட பொருளாளர் எல்.பாலசுப்பிர மணி வரவு-செலவு அறிக்கையையும் முன் வைத்தனர். சிஐடியு சங்க மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் சிறப்புரையாற்றினார். தோழமை சங்கத்தினர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எம்.செல்வராணி மாநாட்டை நிறைவு செய்து பேசினார். மாநில செயற் குழு உறுப்பினர் வ.கோபி நன்றி கூறி னார். மாவட்டத்தின் புதிய தலைவராக எம்.எஸ்.அன்பழகன், செயலாளராக பொன்.ஜெயராம், பொருளாளராக எல். பாலசுப்பிரமணி, மாவட்ட துணைத் தலைவர்கள் சி.கண்ணன், முருகேசன், கிருஷ்ணமூர்த்தி, தமிழரசன், மாவட்ட இணைச் செயலாளர்கள் இளங்கோ, சங்கர், பிரவீனா, பாஸ்கரன், மாநில செயற்குழு உறுப்பினர் வ.கோபி, மாவட்ட தணிக்கையாளர்கள் கே. செல்லமுத்து, தமிழ்மணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப் பாளராக முத்துமாரி தேர்ந்தெடுக்கப் பட்டார். புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்து துறைகளிலும் அவுட்சோர்சிங் நியம னங்களை கைவிட்டு. அரசு துறையில் உள்ள காலிப் பணியிடங்களை கால முறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும். கரூர் மாவட்டம், தோகைமலை பகுதியை தனி வட்டமாக அறிவிக்க வேண்டும். அரவக்குறிச்சி அரசு கலைக் கல்லூரிக்கு புதிய இடம் தேர்வு செய்து, புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும். குளித்தலை பேருந்து நிலையத்தை வேறு இடத்தில் மாற்றி புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.