districts

img

அரசு ஊழியர் சங்க மாணிக்க ஆண்டு நிறைவு விழா

திருவாரூர்/கும்பகோணம், மே 7 - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்  மாணிக்க ஆண்டு நிறைவு நாளை யொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள  அரசு அலுவலகங்கள் முன்பு அரசு ஊழி யர் சங்கத்தின் வட்டக்கிளை சார்பாக 41  ஆவது அமைப்பு தின கொடி ஏற்றப்பட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு  ஊழியர் சங்க மாநில துணைப் பொதுச்  செயலாளர் வே.சோமசுந்தரம் அமைப்பு தின கொடியை ஏற்றி வைத்து சிறப்பு ரையாற்றினார். மாவட்டச் செயலாளர் செ. பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மன்னார்குடி வட்டாட்சியர் அலுவல கம், நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவல கம் முன்பாக மாவட்டச் செயலாளர் செ.பிர காஷ் கொடியை ஏற்றி வைத்து உரை யாற்றினார். திருவாரூர் வட்டக்கிளை பகுதியில் 6 இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் எஸ்.செங்குட்டுவன் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.  குடவாசல் வட்டக் கிளையில் மாவட்ட பொருளாளர் வீ.தெட்சிணாமூர்த்தி, கொரடாச்சேரியில் மாவட்ட துணைச்  செயலாளர் கே.எஸ்.செந்தில், வலங்கை மானில் மாவட்ட இணைச் செயலாளர் வி. ராஜசேகர், முத்துப்பேட்டையில் மகளிர் துணைக் குழு அமைப்பாளர் தமிழ்சுடர் ஆகியோர் அமைப்பு தின கொடியேற்றி சிறப்புரையாற்றினர். நிகழ்வில் மாவட்ட, வட்டக் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம், வணிக வரித்துறை அலுவலகம் ஆகிய இடங்களில்  கொடியேற்ற நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கும்பகோணம் வட்டத்  தலைவர் வெங்கடேசன் தலைமை வகித் தார். வட்டச் செயலாளர் பிரபாகரன், வட்டப்  பொருளாளர் மதியழகன், திருவிடைமரு தூர் ஒன்றியத் தலைவர் கண்ணன், வட்ட  நிர்வாகிகள் பங்கேற்றனர்.