கும்பகோணம், ஜூலை 21- ஒன்றிய அரசின் அரசு ஊழியர் விரோத பட்ஜெட்டை கண்டித்து கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய பாஜக அரசு மக்கள் விரோத திட்டங்களை அறி வித்து பல்வேறு இடையூறுகளை கொடுத்து வந்த நிலை யில், 2024-25-க்கான பட்ஜெட் அறிவிப்பு செவ்வாயன்று வெளியானது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு குளறுபடி கள், மாற்றங்கள் உள்ள நிலையில், அரசு ஊழியர்களுக்கு விரோதமாக பட்ஜெட் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதனை கண்டித்து தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கும்பகோ ணம் வட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். கும்பகோணம் வட்டச் செயலாளர் பிரபாகரன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ராஜகோபால், வட்டச் செயலாளர் பக்கிரிசாமி, திருவி டைமருதூர் வட்டத் தலைவர் கண்ணன், மாவட்ட மகளிர் துணைக் குழு உறுப்பினர் கவிதா ஆகியோர் கண்டன உரையாற்றினர். வட்ட பொருளாளர் மதியழகன் நன்றி கூறி னார்.